நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை: கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லுாரியில் சென்னையில் உள்ள பன்னாட்டு நிறுவனமான ஐ.ஐ.எல்., மன்டோ ஆனந்த் இந்தியா சார்பில் டிப்ளமோ 2024 இறுதி ஆண்டு பயிலும் இயந்திரவியல் துறை, மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை மாணவர்களுக்காக வேலை அளிக்கும் விதமாக வளாக நேர்முகத் தேர்வு நடந்தது.
பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் சேக் தாவூத் தலைமை வகித்தார். இயந்திரவியல் துறை தலைவர் கணேஷ் குமார் வரவேற்றார். சென்னை நிறுவனத்தின் சீனியர் எக்ஸிக்யூடிவ் ஹரிஷ் மற்றும் நிபின் பிரகாஷ் ஆகியோர் நேர்முக வளாகத் தேர்வு நடத்தினர். 52 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

