sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

முன் விரோதத்தில் தாக்குதல் 9 பேர் மீது வழக்கு :5 பேர் கைது

/

முன் விரோதத்தில் தாக்குதல் 9 பேர் மீது வழக்கு :5 பேர் கைது

முன் விரோதத்தில் தாக்குதல் 9 பேர் மீது வழக்கு :5 பேர் கைது

முன் விரோதத்தில் தாக்குதல் 9 பேர் மீது வழக்கு :5 பேர் கைது


ADDED : நவ 19, 2024 05:09 AM

Google News

ADDED : நவ 19, 2024 05:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேவிபட்டினம்: தேவிபட்டினம் அருகே இலந்தைகூட்டம் பகுதி இளைஞர்கள் பழனிவலசை கிராமத்தில் புகுந்து தாக்குதல் நடத்திய பிரச்னையில் 9 பேர் மீது வழக்கு பதிந்த போலீசார் 5 பேரை கைது செய்தனர்.

தேவிபட்டினம் அருகே இலந்தைகூட்டம் பகுதியை சேர்ந்த சிலர் சில வாரங்களுக்கு முன்பு பழனிவலசையை சேர்ந்த இளம்பெண்ணை கேலி செய்துள்ளனர். இதற்கு பழனிவலசையை சேர்ந்தவர்கள் கேலி செய்த இளைஞர்களை கண்டித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த இலந்தைகூட்டம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் நேற்று முன் தினம் இரவில் பழனிவலசை கிராமத்திற்குள் ஆயுதங்களுடன் புகுந்து அப்பகுதியில் இருந்தவர்களை தாக்கினர். இதில் பழனிவலசை உதயகுமார் 44, லோகநாதன் 40, ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இது தொடர்பான சி.சி.டி.வி., பதிவுகள் சமூக வலைதளத்தில் வெளியாகியது. இது குறித்த புகாரில் 9 பேர் மீது வழக்கு பதிந்த போலீசார் இலந்தை கூட்டம் பிரபு தேவா 28, முனீஸ்வரன் 19, லோகேஷ் 19, சிவக்குமார் 20, வாளேஸ்வரன் 25, ஆகிய ஐந்து பேரை தேவிபட்டினம் போலீஸ் எஸ்.ஐ., ஜெகநாதன் கைது செய்து விசாரிக்கிறார்.

--






      Dinamalar
      Follow us