ADDED : ஏப் 04, 2026 06:08 PM
அ நிறம் | அளவு
பரமக்குடி: பரமக்குடியில் நேற்று முன்தினம் மாலை த.வெ.க., வேட்பாளர் கோபி ராஜனுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. மணி நகர் துவங்கி சந்தை கடை வரை தேர்தல் நடத்தை விதிகளை மீறி அனுமதி இல்லாமல் ரோட்டை மறித்து பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தி பட்டாசு வெடித்தனர்.
இதையடுத்து வேட்பாளர் கோபி ராஜன், நிர்வாகிகள் கார்த்திகேயன், மதன்குமார், அர்ஜூன் பாண்டியா உட்பட பலர் மீது டவுன் போலீஸ் எஸ்.ஐ., கணேசமூர்த்தி வழக்கு பதிந்தார்.
