sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ரூ.29.85 லட்சம் கையாடல் சகோதரர்கள் மீது வழக்கு

/

ரூ.29.85 லட்சம் கையாடல் சகோதரர்கள் மீது வழக்கு

ரூ.29.85 லட்சம் கையாடல் சகோதரர்கள் மீது வழக்கு

ரூ.29.85 லட்சம் கையாடல் சகோதரர்கள் மீது வழக்கு


ADDED : டிச 04, 2024 12:59 AM

Google News

ADDED : டிச 04, 2024 12:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீழக்கரை:ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை சேரன் தெருவை சேர்ந்தவர் முகமது நபீல், 27. இவர் கீழக்கரையில் டிராவல்ஸ் நிறுவனத்தை நடத்துகிறார். இவரது நிறுவனத்தில், 2020ல் கீழக்கரையை சேர்ந்த முகமது சுபைதீன், கணக்காளராக பணியில் சேர்ந்தார். அதன்பின், 2021ல் முகமது நபீல், ஆந்திராவில் சட்டக்கல்லுாரியில் படிக்க சென்றார்.

அப்போது, நிறுவனத்தின் அனைத்து பொறுப்புகளை முகமது சுபைதீனிடம் ஒப்படைத்து சென்றார். இந்நிலையில் வாடிக்கையாளர்களிடம் இருந்து சேவை குறைபாடு இருப்பதாகவும், பணம் சரியாக செலுத்தப்படவில்லை என்ற புகார்கள் வந்தன.

இதையடுத்து, முகமது நபீல், 2023 ஏப்., முதல் 2024 ஆக., வரையிலான நிறுவன கணக்குகளை ஆய்வு செய்துள்ளார். இதில், முகமது சுபைதீன், அங்கு பணிபுரிந்த அவரது தம்பி பரூக்மரைக்கா இணைந்து, 29 லட்சத்து 85,000 ரூபாயை கையாடல் செய்திருப்பது தெரிந்தது. முகமது நபீல், புகாரின்படி, சகோதரர்கள் முகமது சுபைதீன், பரூக்மரைக்கா மீது வழக்குப்பதிவு செய்த கீழக்கரை போலீசார் அவர்களை தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us