sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

அமைச்சரின் உதவியாளரை தாக்கிய தி.மு.க., ஒன்றிய செயலர் மீது வழக்கு

/

அமைச்சரின் உதவியாளரை தாக்கிய தி.மு.க., ஒன்றிய செயலர் மீது வழக்கு

அமைச்சரின் உதவியாளரை தாக்கிய தி.மு.க., ஒன்றிய செயலர் மீது வழக்கு

அமைச்சரின் உதவியாளரை தாக்கிய தி.மு.க., ஒன்றிய செயலர் மீது வழக்கு


ADDED : ஜூலை 14, 2025 06:26 AM

Google News

ADDED : ஜூலை 14, 2025 06:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதுகுளத்துார்: முதுகுளத்துாரில் நடந்த தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் ராஜகண்ணப்பன், தி.மு.க., மாவட்டச் செயலர் காதர்பாட்ஷா தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில், அமைச்சர் உதவியாளர் தாக்கப்பட்ட விவகாரத்தில், இருதரப்பிலும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்துாரில் உள்ள தனியார் மஹாலில், 'ஓரணியில் தமிழ்நாடு' குறித்து, தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், நேற்று முன்தினம் நடந்தது.

இத்தொகுதி எம்.எல்.ஏ.,வான அமைச்சர் ராஜகண்ணப்பன் உதவியாளர் டோனி இதற்கான ஏற்பாடுகளை செய்தார்.

அப்போது அங்கு வந்த தி.மு.க., மாவட்டச் செயலர் காதர்பாட்ஷா எம்.எல்.ஏ.,வின் ஆதரவாளரான கடலாடி தெற்கு ஒன்றிய செயலர் மாயகிருஷ்ணன், இளைஞரணி அமைப்பாளர் முரளிதரன் ஆகியோர் டோனியை தாக்கினர்.

காயமடைந்த டோனி, முரளிதரன், முதுகுளத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். போலீசார் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து வருகின்றனர். தி.மு.க.,வினர் மோதல் வீடியோ பரவியது. டோனி புகாரில் மாயகிருஷ்ணன், முரளிதரன் மீதும், முரளிதரன் புகாரில் டோனி மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

டோனிக்கும், மாயகிருஷ்ணனுக்கும் டெண்டர் எடுப்பதில் பிரச்னை இருந்தது. தன்னை மிரட்டியதாக இரு மாதங்களுக்கு முன் போலீஸ் எஸ்.பி.,யிடம், டோனி புகார் தெரிவித்திருந்தார். இதற்கிடையில், இந்த தாக்குதல் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, தி.மு.க., ஒன்றிய செயலரை கைது செய்ய வலியுறுத்தி, தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு சார்பில், ராமநாதபுரம், தங்கச்சிமடம் உள்ளிட்ட பகுதிகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

அதில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், போராட்டம் நடத்தப்படும் என, கூறியுள்ளனர்.






      Dinamalar
      Follow us