/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருந்த வழக்கு: இரு சாட்சிகளிடம் விசாரணை
/
பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருந்த வழக்கு: இரு சாட்சிகளிடம் விசாரணை
பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருந்த வழக்கு: இரு சாட்சிகளிடம் விசாரணை
பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருந்த வழக்கு: இரு சாட்சிகளிடம் விசாரணை
ADDED : ஜூலை 17, 2025 03:04 AM
ராமநாதபுரம்:இந்திய ராணுவ ரகசியங்களை திருட பாகிஸ்தான், இலங்கையை சேர்ந்த பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருந்த மலேசிய நாட்டை சேர்ந்தவர் மீதான வழக்கில் ராமநாதபுரம் நீதிமன்றத்தில் இரு சாட்களிடம் விசாரணை நடந்தது. ஜூலை 22க்கு வழக்கு தள்ளி வைக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே என்மனங்கொண்டான் மேற்கு தெருவை சேர்ந்தவர் சித்தி கலைஹா 52. இவர்  அக்கா கணவர் மலேசிய குடியுரிமை பெற்ற அப்துல்ரஷீத் 58, அங்கு ஓட்டல் நடத்தி வருகிறார்.
இவர் ஓட்டலில் வேலை பார்த்த இலங்கை கொழும்பு பகுதியை சேர்ந்த முகமது யாசீர் 40,மனைவி பாரிகா ரிஸ்மியா 35, ஆகியோர் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக இருந்துள்ளனர். இவர்கள் உச்சிப்புளி அருகே என்மனங்கொண்டான் பகுதியில் வசிக்கும் சித்திகலைஹா வீட்டில் 2015 முதல் 2021 வரை தங்கியிருந்தனர்.
இவர்கள் இந்தியர்கள் என சித்தி கலைஹா தனது ரேஷன் கார்டில் முகமது யாசீர் தம்பி என்றும், பாரிகா ரிஸ்மியா மருமகள் என அதிகாரிகளிடம் பொய்யான தகவல்களை தெரிவித்து சேர்த்துள்ளார். இவர்களுக்கு ஆதார்கார்டு பெற்று தந்துள்ளார். இந்த போலி ஆதார் கார்டு மூலம் இரண்டு சிம்கார்டுகளை முகமது யாசிர் பெற்று பாகிஸ்தான் நபரான ஐ.எஸ்.ஐ.எஸ்., அமைப்பிடம் தொடர்புள்ள முகமது மிப்லால் மவுலவி என்பவரிடம் கொடுத்துள்ளார்.
அந்த சிம்கார்டுகளை பயன்படுத்தி முகமது மிப்லால் மவுலவி இந்திய ராணுவத்தின் ஒரு அங்கமான ஆர்மி பப்ளிக் ஸ்கூல் என்ற லோகோவை பயன்படுத்தி ராணுவ அதிகாரிகளின் அலைபேசிக்கு மால்வேர் அட்டாக் மூலம் ராணுவ ரகசியங்களை திருடி வந்துள்ளனர். அலைபேசிகளை ேஹக் செய்து அதில் உள்ள தகவல்களை அழித்துள்ளனர்.  இதுகுறித்து தகவல் தெரிந்த கியூ பிரிவு போலீசார் 2021 ல் முகமது யாசீர், பாரிகா ரிஸ்மியா, அப்துல்ரஷீத், சித்திகலைஹா, முகமது மிப்லால் மவுலவி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். முகமது மிப்லால் மவுலவி மட்டும் தலைமறைவானார். மற்ற நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் ஜாமினில் வந்தனர். இது தொடர்பான வழக்கு ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிபதி மெஹபூப் அலிகான் முன் விசாரணைக்கு வந்தது. சித்திகலைஹா, முகமதுயாசீர், பாரிகா ரிஸ்மியா, அப்துல் ரஷீத் ஆஜராகினர். அரசு தரப்பு சாட்சியங்களான இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஆதார் மையத்தின் பொறுப்பாளரான காளீஸ்வரன் ஆதாரில் அலைபேசி எண் மாற்றம் செய்ததற்காகவும், உச்சிப்புளி ரேஷன் கடை விற்பனையாளர் ராஜேஸ்வரியிடம் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தது குறித்தும் அரசு மாவட்ட தலைமை வழக்கறிஞர் கார்த்திகேயன் விசாரணை செய்தார்.
எதிர் தரப்பின் வழக்கறிஞர்கள் இரு சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை செய்தனர். பின் நீதிபதி மெஹபூப் அலிகான் வழக்கு விசாரணையை ஜூலை 22 க்கு தள்ளி வைத்தார்.

