/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பஸ் ஸ்டாண்டில் ஓய்வெடுக்கும் கால்நடைகள்: பயணிகள் பாதிப்பு; உரிமையாளர்கள் மீது நடவடிக்கை பாயுமா...
/
பஸ் ஸ்டாண்டில் ஓய்வெடுக்கும் கால்நடைகள்: பயணிகள் பாதிப்பு; உரிமையாளர்கள் மீது நடவடிக்கை பாயுமா...
பஸ் ஸ்டாண்டில் ஓய்வெடுக்கும் கால்நடைகள்: பயணிகள் பாதிப்பு; உரிமையாளர்கள் மீது நடவடிக்கை பாயுமா...
பஸ் ஸ்டாண்டில் ஓய்வெடுக்கும் கால்நடைகள்: பயணிகள் பாதிப்பு; உரிமையாளர்கள் மீது நடவடிக்கை பாயுமா...
ADDED : ஜன 27, 2025 05:22 AM

பரமக்குடி : பரமக்குடி பஸ் ஸ்டாண்டில் படுத்து உறங்கும் மாடுகளால் பஸ்கள் உள்ளே வந்து செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.
பரமக்குடி நகரில் தெருக்களில் மாடுகளை அவிழ்த்து விடுகின்றனர். முன்பு பசு மாடுகளை வளர்ப்பவர்கள் அதற்கான கூடாரத்தை அமைத்து பராமரித்தனர். கடந்த சில ஆண்டுகளாக பசு மாடுகள் உட்பட, காளை மாடுகளையும் தெருக்களில் மேயவிடுகின்றனர்.
தொடர்ந்து மாடுகளை வளர்ப்பவர்கள் ஒன்றும் தெரியாதவர்கள் போல் அவிழ்த்து விடுகின்றனர். இதனால் வியாபாரிகளின் உணவுகளை சாப்பிடுவதால் பலர் நஷ்டம் அடைகின்றனர்.
பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பொது இடங்களில் மாடுகள் ஓய்வு எடுப்பதால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். தெருவில் திரியும் விலங்குகள் எச்சங்களால் தொற்று நோய் அச்சம் அதிகரித்துள்ளது.
எனவே பஸ் ஸ்டாண்ட் உட்பட மக்கள் கூடும் இடங்களில் கால்நடை நடமாட்டம் அதிகரித்துள்ளதை கட்டுப்படுத்தி, அதன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம், அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

