sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

இரவில் நாய்கள் குரைத்ததால் சிதறி ஓடிய ஆடு திருடர்கள் சி.சி.டி.வி., காட்சி பரவுகிறது

/

இரவில் நாய்கள் குரைத்ததால் சிதறி ஓடிய ஆடு திருடர்கள் சி.சி.டி.வி., காட்சி பரவுகிறது

இரவில் நாய்கள் குரைத்ததால் சிதறி ஓடிய ஆடு திருடர்கள் சி.சி.டி.வி., காட்சி பரவுகிறது

இரவில் நாய்கள் குரைத்ததால் சிதறி ஓடிய ஆடு திருடர்கள் சி.சி.டி.வி., காட்சி பரவுகிறது


ADDED : பிப் 11, 2024 12:10 AM

Google News

ADDED : பிப் 11, 2024 12:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி: -ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இரவில் ஆடு திருடியபோது நாய்கள்குரைத்ததால் சிக்கியஇரண்டு ஆடுகளை மட்டும் துாக்கிக்கொண்டு ஆடு திருடர்கள் சிதறி ஓடிய வீடியோ காட்சி பரவுகிறது.

பரமக்குடி அருகே விளத்துார் கிராமத்தில் பெரும்பாலான மக்கள் ஆடு வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் நடு இரவில் மூன்று பேர் கும்பல் இரண்டு ஆடுகளை திருடிச் சென்றனர்.

தொடர்ந்து இப்பகுதியில் ஆடுகள் திருடப்படுவதால் ஆடு வளர்ப்போர் தங்கள் வீடுகளில் சி.சி.டி.வி., பொருத்தி உள்ளனர்.

ஆடுகள் திருட்டு போனது குறித்து சி.சி.டி.வி., பதிவுகளை ஆய்வு செய்த போது மூன்று பேர் நள்ளிரவில் இரண்டு ஆடுகளை இழுத்துச் சென்றது தெரிந்தது. அப்போது நாய்கள் குரைத்ததால் சிதறியடித்து ஓடியதும் பதிவாகி இருந்தது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இதே போல் பல கிராமங்களில் தொடர்ந்து ஆடுகள் திருட்டு அவ்வப்போது நடந்து வருவதாகவிவசாயிகள் தெரிவித்தனர்.

சி.சி.டி.வி., பதிவு அடிப்படையில் போலீசார் ஆடு திருடர்களை உடனடியாக கைது செய்யவும் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us