ADDED : மார் 26, 2025 04:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் அருகே செங்குடி புனித மிக்கேல் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், ராமநாதபுரம் தஸ்தகீர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த சுற்றுச்சூழல் கண்காட்சியில் பங்கேற்று சிறந்த படைப்புகளுக்கான இரண்டாம் பரிசு பெற்றனர்.
இரண்டாம் பரிசு பெற்ற மாணவர்கள் சுகில், அபிநயா மற்றும் தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர் கருணாகரன் ஆகியோருக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பாக்கிய ரோசரி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.