ADDED : ஏப் 03, 2025 05:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி: பரமக்குடி சந்தன மாரியம்மன் கோயிலில் மார்ச் 25ல் 62வது ஆண்டு பங்குனி பொங்கல் விழா துவங்கியது. தினமும் அம்மன் பல்வேறு அலங்காரங்களில் அருள்பாலித்தார்.
ஏப்.,1 அக்னிச்சட்டி ஊர்வலம் நடந்தது. இரவு கோயில் முன்பு பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். பின்னர் அம்மன் கரகம் எடுத்து நகர்வலம் வந்தனர்.
நாளை காலை 8:00 மணிக்கு வைகை ஆற்றில் இருந்து பால்குடம் புறப்பட்டு பாலாபிஷேகம் நடக்கிறது.

