sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

சந்தனமாரியம்மன் கோயில் 8 ஆண்டுக்கு பின் திறப்பு

/

சந்தனமாரியம்மன் கோயில் 8 ஆண்டுக்கு பின் திறப்பு

சந்தனமாரியம்மன் கோயில் 8 ஆண்டுக்கு பின் திறப்பு

சந்தனமாரியம்மன் கோயில் 8 ஆண்டுக்கு பின் திறப்பு


ADDED : ஜூலை 16, 2025 11:28 PM

Google News

ADDED : ஜூலை 16, 2025 11:28 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டி: தொண்டி புதுக்குடியில் எட்டு ஆண்டுகளாக பூட்டியிருந்த சந்தனமாரியம்மன் கோயில் நேற்று திறக்கப்பட்டது.

தொண்டி புதுக்குடி கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ளது சந்தனமாரியம்மன் கோயில். 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இக்கோயிலில் வரவு செலவு பார்ப்பது சம்பந்தமாக இரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்டது. இதனால் கோயில் பூட்டப்பட்டு திருவாடானை தாலுகா அலுவலகத்தில் சாவி ஒப்படைக்கப்பட்டது.

எட்டு ஆண்டுகளாக பூட்டியிருந்ததால் அக் கிராம மக்கள் கவலையடைந்தனர். அதனை தொடர்ந்து கோயிலை திறக்க அதிகாரிகளை சந்தித்து விருப்பம் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து தாலுகா அலுவலகத்தில் திருவாடானை தாசில்தார் ஆண்டி தலைமையில் சமாதான கூட்டம் இரு நாட்களுக்கு முன்பு நடந்தது.

கூட்டத்தில் இனிவரும் காலங்களில் அனைவரும் ஒற்றுமையாக சுவாமி கும்பிட வேண்டும் என்று அதிகாரிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இக்கருத்தை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.அதன்படி நேற்று மாலை 5:30 மணிக்கு திருவாடானை தாசில்தார் ஆண்டி, வருவாய் ஆய்வாளர் மேகமலை மற்றும் கிராமத்தினர் முன்னிலையில் கோயில் திறக்கப்பட்டது.

கிராம மக்கள் சந்தோஷமாக சிறப்பு பூஜை செய்து அம்மனை தரிசனம் செய்தனர்.






      Dinamalar
      Follow us