/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் கோயிலில் இன்று மாலை மாற்றுதல்
/
ராமேஸ்வரம் கோயிலில் இன்று மாலை மாற்றுதல்
ADDED : ஜூலை 29, 2025 12:26 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடிப் பூரம் திருவிழாவையொட்டி அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தது.
ஜூலை 19ல் ராமேஸ்வரம் கோயிலில் கொடி ஏற்றத்துடன் ஆடித் திருக்கல்யாண விழா துவங்கியது. 10ம் நாள் திருவிழாவில் நேற்று கோயிலில் காலை 9:00 மணிக்கு தங்க பல்லக்கில் அம்மன் எழுந்தருளி உலா வந்தார்.
மதியம் 12:00 மணிக்கு அம்மனுக்கு மஞ்சள் நீராடல், சிவ தீர்த்தத்தில் தீர்த்தவாரி சுவாமி நீராடி பக்தர்களுக்கு தீர்த்தவாரி கொடுத்தல், கன்னி பெண்கள், பூரம் தொழுதல் நடந்தன. இதனைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தது. இரவு 8:30 மணிக்கு மேல் அம்மன் சன்னதி முன்புள்ள திருவிழா கொடியை கோயில் குருக்கள் இறக்கினார்கள்.
இன்று ஆடித்தபசு 11ம் திருவிழாவான இன்று ஆடித் தபசையொட்டி கோயிலில் இருந்து சுவாமி, அம்மன் புறப்பாடாகி தபசு மண்டகபடியில் எழுந்தருள்வர். மதியம் 2:00 மணிக்கு மேல் சுவாமி, அம்மனுக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கும். இரவு 9:00 மணிக்கு பர்வதவர்த்தினி அம்மன் தங்க பல்லக்கில் தபசு மண்டகபடியில் எழுந்தருள்வார்.