ADDED : மே 21, 2025 11:54 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி: திருவாடானை அருகே சீவலாத்தி கிராமத்தில் உள்ள புனித செபஸ்தியார் சர்ச் திருவிழா மே 12ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு தேர்பவனி நடந்தது.
முன்னதாக நடந்த சிறப்பு திருப்பலியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு சர்ச் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.