ADDED : டிச 25, 2024 04:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்,: திருப்புல்லாணி அருகே வண்ணாங்குண்டு ஊராட்சிஒன்றிய தொடக்கப்பள்ளியில் 'சைல்டு ஹவுஸ்' துவக்க விழாநடந்தது. ராமநாதபுரம் மாவட்ட கல்வி அலுவலர் பிரின்ஸ்ஆரோக்கியராஜ் துவக்கி வைத்தார். வட்டாரகல்வி அலுவலர் உஷா முன்னிலை வகித்தார்.
எஸ்.எம்.சி.,தலைவி ரோஸ்லி பர்வின், தலைமையாசிரியர் ஜெயசுதா குத்து விளக்கு ஏற்றினர். ஒவ்வொரு ஹவுஸ் சார்ந்தசெயல்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.ஆசிரியர்கள் சத்திய பகவதி, திவ்யா, மரியசெபஸ்டியன், கவிதா, மகாலட்சுமி பங்கேற்றனர்.