sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பராமரிப்பின்றி பூட்டியுள்ள அம்மா பூங்கா விளையாட இடமின்றி சிறுவர்கள் தவிப்பு

/

பராமரிப்பின்றி பூட்டியுள்ள அம்மா பூங்கா விளையாட இடமின்றி சிறுவர்கள் தவிப்பு

பராமரிப்பின்றி பூட்டியுள்ள அம்மா பூங்கா விளையாட இடமின்றி சிறுவர்கள் தவிப்பு

பராமரிப்பின்றி பூட்டியுள்ள அம்மா பூங்கா விளையாட இடமின்றி சிறுவர்கள் தவிப்பு


ADDED : மே 20, 2025 12:38 AM

Google News

ADDED : மே 20, 2025 12:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: திருவாடானை மங்களநாதன் குளம் அருகே உள்ள அம்மா பூங்கா பராமரிப்பின்றி, பூட்டபட்டுள்ளது. கோடை விடுமுறையில் விளையாட, பொழுதுபோக்க முடியாமல் சிறுவர்கள், மக்கள் சிரமப்படுகின்றனர்.

திருவாடானை மங்களநாதன் குளம் அருகே அம்மா பூங்கா துவங்கபட்டது. உடற்பயிற்சி கூடம், அமர்ந்து இருப்பதற்கு இருக்கை, நடைபயிற்சி தளம் என பல்வேறு வசதிகளுடன் அமைக்கபட்டது. இதனால் பள்ளிக் குழந்தைகள் விளையாடி மகிழவும், அதன் வாயிலாக தங்கள் உடல்நலன், மனதை வலுப்படுத்திக் கொள்ளவும் பூங்கா பயனாக இருந்தது.

அ.தி.மு.க., ஆட்சியில் அம்மா பூங்கா என பெயர் சூட்டபட்டது.

சிறுவர்கள் விளையாடுவதற்கு ஊஞ்சல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு உபகரணங்கள், நடைபயிற்சி மேற்கொள்ள தளம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டன. மேலும், விலையுயர்ந்த உடற்பயிற்சி சாதனங்களை உள்ளடக்கிய, இளைஞர்களுக்கான உடற்பயிற்சிக்கூடமும் அமைக்கப்பட்டன. இருப்பினும் இவற்றை பராமரிக்க சம்மந்தப்பட்ட ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்கீடு என்பது துவக்கம் முதலே இல்லை. ஊராட்சி தலைவர்கள் அவ்வப்போது பராமரித்து வந்தனர். தற்போது, அவர்களின் பதவிக்காலம் முடிந்த நிலையில் அலுவலர்களின் பொறுப்பில் உள்ளது.

பூங்கா பராமரிப்பு இல்லாமல், புதர்மண்டி கிடக்கின்றன. விஷ ஜந்துகளின் குடியிருப்பாகவும் மாறியுள்ளன. உடற்பயிற்சி கூடத்தில் பொருத்தப்பட்டிருந்த உபகரணங்கள் மாயமாகியுள்ளது. தற்போது கோடைவிடுமுறை என்பதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் பொழுது போக்கு இடம் இல்லாமல் தவிக்கின்றனர். பூங்காவை பராமரித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us