/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வறட்சியால் மிளகாய் விவசாயம் பாதிப்பு
/
வறட்சியால் மிளகாய் விவசாயம் பாதிப்பு
ADDED : பிப் 25, 2026 08:34 AM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நெல்லுக்கு அடுத்தபடியாக மிளகாய் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது மகசூல் நிலையை எட்டி செடிகளில் இருந்து மிளகாய் பழங்கள் பறிக்கும் பணிகள் நடக்கின்றன.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நிலவும் வறட்சியால் ஆர்.எஸ்.மங்கலம் சுற்றுப்புற பகுதிகளில் மிளகாய் வயல்கள் ஈரப்பதம் இன்றி உள்ளதால் மிளகாய் செடிகள் வெயிலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் வதங்கி வருகின்றன.
இதனால், ஏக்கருக்கு பல ஆயிரம் செலவு செய்து மிளகாய் சாகுபடி செய்துள்ள மிளகாய் விவசாயிகள் மகசூல் இழப்பு ஏற்பட்டு வருவதாக கவலை தெரிவித்துள்ளனர். எனவே, அரசு மிளகாய் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மிளகாய் விவசாயிகள் வலியுறுத்தினர்.

