sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்: மே 8ல் விசாலாட்சி, சந்திரசேகரர் திருக்கல்யாணம்

/

பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்: மே 8ல் விசாலாட்சி, சந்திரசேகரர் திருக்கல்யாணம்

பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்: மே 8ல் விசாலாட்சி, சந்திரசேகரர் திருக்கல்யாணம்

பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்: மே 8ல் விசாலாட்சி, சந்திரசேகரர் திருக்கல்யாணம்


ADDED : மே 01, 2025 06:06 AM

Google News

ADDED : மே 01, 2025 06:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி: பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

பரமக்குடி சவுராஷ்டிர பிராமண மகாஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தைச் சேர்ந்த, விசாலாட்சி அம்பிகா, சந்திர சேகர சுவாமி (ஈஸ்வரன்) கோயில் உள்ளது. இங்கு சித்திரைத் திருவிழாவையொட்டி நேற்று காலை 10:00 மணிக்கு நந்திக்கொடி ஏற்றப்பட்டு அபிஷேகம், மகாதீப ஆராதனை நடந்தது. மாலை சிம்மாசனத்தில் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடாகினர்.

தினமும் காலை, மாலை சந்திரசேகர சுவாமி பிரியா விடையுடனும், விஷாலாட்சி அம்பாள் தனியாகவும் நந்தி, கிளி, குண்டோதரன், சிம்மம், கைலாச கற்பக விருட்சம், அன்னம், ராவண கைலாசம், காமதேனு, ரிஷபம் உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா வருகிறார்.

மே 6 காலை நடராஜர் புறப்பாடு, மாலை குதிரை வாகனத்தில் திக் விஜயம் நடக்கிறது. மே 7 காலை விசாலாட்சி அம்பாள் கமல வாகனத்தில் தபசு திருக்கோலத்தில் காட்சி கொடுக்கிறார். பின்னர் மாலை சுவாமி அம்பாள் மாலை மாற்றல் நிகழ்ச்சி நடக்கிறது.

மே 8 காலை 10:00 முதல் 11:00 மணிக்குள் சுவாமி மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம், விசாலாட்சி, சந்திரசேகர சுவாமி திருக்கல்யாணம் நடக்க உள்ளது. இரவு சுவாமி அம்பாள் யானை வாகனம், பூப் பல்லக்கில் உலா வருவர்.

மே 9 காலை 9:00 மணிக்கு மேல் சித்திரை தேரோட்டம் ரத வீதிகளில் நடக்கிறது. மறுநாள் தீர்த்தவாரி நடந்து, கொடி இறக்கப்படும். மே11 உற்சவ சாந்தியுடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள் செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us