/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இயேசுவின் சிலுவைப்பாடுகள் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை
/
இயேசுவின் சிலுவைப்பாடுகள் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை
இயேசுவின் சிலுவைப்பாடுகள் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை
இயேசுவின் சிலுவைப்பாடுகள் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை
ADDED : பிப் 17, 2024 04:54 AM

ராமநாதபுரம்: -கிறிஸ்தவர்களின் தவக்காலத்தை முன்னிட்டு நேற்று ராமநாதபுரம் ஆர்.சி., சர்ச்சில் சிலுவை பாதை பிரார்த்தனை நடந்தது.
சாம்பல் புதன் தினத்தில் வரும் ஏழு வெள்ளிக்கிழமைகளில் இயேசுவின் சிலுவைப்பாடுகள் பிரார்த்தனைகள் நடக்கும். இதில் இயேசுவுக்கு தண்டனை வழங்கப்பட்டு கல்வாரி மலைக்கு சிலுவையுடன் அழைத்து சென்ற போது நடந்த 14 நிகழ்வுகள் நினைவு கூறப்படும்.
அந்த ஒவ்வொரு நிகழ்வின் முன்பும் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனை செய்வார்கள். நேற்று ராமநாதபுரம் ரோமன் சர்ச்சில் இயேசுவின் சிலுவைபாடுகள் பிரார்த்தனை பாதிரியார் சிங்கராயர் தலைமையில் நடந்து. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.