/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சேதமடைந்த விசைப்படகிற்கு நிவாரணம் வழங்க கோரிக்கை
/
சேதமடைந்த விசைப்படகிற்கு நிவாரணம் வழங்க கோரிக்கை
ADDED : ஜன 02, 2025 11:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி; தொண்டி சோலியக்குடியை சேர்ந்தவர் விசாலாட்சி. இவருக்கு சொந்தமான விசைப்படகில் நான்கு மீனவர்கள் டிச.30 காலை 6:00 மணிக்கு மீன்பிடிக்கச் சென்றனர். படகின் அடிப்பகுதியில் பலகை உடைந்ததால் கடல் நீர் புகுந்து படகு மூழ்கியது.
தத்தளித்த மீனவர்களை அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மற்ற மீனவர்கள் காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தனர்.
மூழ்கிய படகு இரு நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டது. ஆனால் படகு முற்றிலும் சேதமடைந்தது. இது குறித்து விசாலாட்சி, சேதமடைந்த படகிற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பியுள்ளார்.

