sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

சுத்தம் செய்யுங்கள் n தேவிபட்டினம் நவபாஷாண கடற்கரையை n கழிவுநீர் துர்நாற்றத்தால் பக்தர்கள் அவதி

/

சுத்தம் செய்யுங்கள் n தேவிபட்டினம் நவபாஷாண கடற்கரையை n கழிவுநீர் துர்நாற்றத்தால் பக்தர்கள் அவதி

சுத்தம் செய்யுங்கள் n தேவிபட்டினம் நவபாஷாண கடற்கரையை n கழிவுநீர் துர்நாற்றத்தால் பக்தர்கள் அவதி

சுத்தம் செய்யுங்கள் n தேவிபட்டினம் நவபாஷாண கடற்கரையை n கழிவுநீர் துர்நாற்றத்தால் பக்தர்கள் அவதி


ADDED : ஜன 05, 2024 05:50 AM

Google News

ADDED : ஜன 05, 2024 05:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம், : ராமநாதபுரம் அருகே தேவிப்பட்டினம் நவபாஷாண கடற்கரை பகுதியில் கழிவுநீர் தேங்கி குப்பை குவிந்துள்ளது. நவக்கிரகங்களை வழிபட வரும் பக்தர்கள் துர்நாற்றத்தால் பாதிக்கப்படுகின்றனர். எனவே கடற்கரை பகுதியை சுத்தம் செய்வதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், திருப்புல்லாணி, தேவிபட்டினம் உள்ளிட்ட புகழ்பெற்ற ஆன்மிக தலங்கள் உள்ளன. குறிப்பாக ராமநாதபுரத்தில் இருந்து 15 கி.மீ.,ல் உள்ள தேவிப்பட்டினம் கடலில் ஸ்ரீ ராமர் வழிப்பட்ட நவபாஷாணத்தினாலான நவக்கிரக சிலைகள் உள்ளன. இக்கோயில் தமிழகத்தில் உள்ள நவக்கிரக பரிகார வழிபாடு தலங்களில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இங்கு முன்ஜென்ம பாவங்கள் தீரவும், பிதுர்கடன் கழிக்கவும், தர்ப்பணம் செய்யவும், திருமண தடை, தோஷ நிவர்த்தி உள்ளிட்ட பரிகார பூஜைகள் செய்கின்றனர்.

தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். இத்தகைய சிறப்பு வாய்ந்த நவபாஷாண கடற்கரை பகுதியை பராமரிக்காமல் அப்படியே விட்டுள்ளனர்.

இதனால் குப்பை குவிந்து கழிவுநீர் கடலில் கலப்பதால் அப்பகுதி முழுவதும் அசுத்தமாகி துர்நாற்றம் வீசுகிறது.

இதனால் கடல்வளம் பாதிக்கப்படுவதுடன் பக்தர்களுக்கு நோய்த்தொற்று அபாயம் உள்ளது. எனவே நவபாஷாண கடற்கரையில் தேங்கியுள்ள குப்பையை அகற்றி சுத்தம் செய்யவும், கழிவுநீர் கலப்பதை தடுக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us