ADDED : ஜூன் 08, 2025 11:11 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: -ராமநாதபுரம் வாலாந்தரவை தெற்குவாணி வீதியை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் புருேஷாத்தமன் 38. இவர் பழனிவலசை அரசு பள்ளியில் கிளர்க்காக பணிபுரிந்தார். தனது டூவீலரில் தேவிபட்டினம் ரோட்டில் பேராவூர் அருகே நேற்று முன்தினம் இரவு வந்து கொண்டிருந்தார்.
ராமநாதபுரத்திலிருந்து தேவிபட்டினம் நோக்கி சென்ற லாரி மோதியதில் புருேஷாத்தமன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
நிற்காமல் சென்ற லாரியை தேவிபட்டினம் போலீசார் மடக்கி பிடித்தனர். கேணிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.