sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

தட்பவெப்ப மாறுபாடு: பாம்பனில் மீன் வரத்து குறைவதால் நஷ்டம்

/

தட்பவெப்ப மாறுபாடு: பாம்பனில் மீன் வரத்து குறைவதால் நஷ்டம்

தட்பவெப்ப மாறுபாடு: பாம்பனில் மீன் வரத்து குறைவதால் நஷ்டம்

தட்பவெப்ப மாறுபாடு: பாம்பனில் மீன் வரத்து குறைவதால் நஷ்டம்


ADDED : ஜூலை 15, 2025 06:31 AM

Google News

ADDED : ஜூலை 15, 2025 06:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்; தட்பவெப்ப மாறுபாட்டால் ராமேஸ்வரம் அருகே பாம்பன் மீனவர்களுக்கு மீன்வரத்து குறைந்தது. இதனால் ரூ.50 ஆயிரம் வரை மீனவர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது.

நேற்று முன்தினம் பாம்பனில் இருந்து 84 விசைப்படகுகளில் மீனவர்கள் மன்னார் வளைகுடா ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றனர். இலங்கை கடற்படை கெடுபிடியால் மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்கச் செல்வதை தவிர்த்து இந்திய எல்லைக்குள் மீன்பிடித்து நேற்று காலை பாம்பன் கரை திரும்பினார்கள்.

இதில் 90 சதவீதம் படகுகளில் மீனவர்களுக்கு எதிர்பார்த்த மீன்வரத்தின்றி மிக குறைவாக சிக்கியது. இதனால் ஒரு படகிற்கு ரூ. 30 ஆயிரம் முதல் ரூ. 50 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டது. சில நாட்களாக தென்மேற்கு பருவக்காற்று வேகம் குறைந்து மன்னார் வளைகுடா கடலில் தட்பவெப்பம், நீரோட்டம் மாறுபாடு ஏற்பட்டது. இதனால் மன்னார் வளைகுடா கடலில் மீன்கள் கூட்டம் இடம் பெயர்ந்ததால் எதிர்பார்த்த மீன்வரத்து இல்லை என பாம்பன் மீனவர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us