sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பாரனுார் நெல் கொள்முதல் நிலையத்தில் கலெக்டர் ஆய்வு

/

பாரனுார் நெல் கொள்முதல் நிலையத்தில் கலெக்டர் ஆய்வு

பாரனுார் நெல் கொள்முதல் நிலையத்தில் கலெக்டர் ஆய்வு

பாரனுார் நெல் கொள்முதல் நிலையத்தில் கலெக்டர் ஆய்வு


ADDED : பிப் 05, 2024 11:34 PM

Google News

ADDED : பிப் 05, 2024 11:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.எஸ்.மங்கலம் -ஆர்.எஸ்.மங்கலம் அருகே பாரனுார் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கலெக்டர் விஷ்ணு சந்திரன் ஆய்வு செய்தார்.

பாரனுார் கொள்முதல் நிலையத்தில் அங்கிருந்த எடை இயந்திரம், நெல்லின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டபின் கலெக்டர் கூறியதாவது:

மாவட்டத்தில் 100 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு தற்போது 70 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. அறுவடை செய்யப்பட்ட நெல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் தற்போது வரை 350 டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஒரு லட்சம் டன் நெல் விவசாயிடமிருந்து கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

நேரடியாக விவசாயிகள் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வதற்கு ஆன்லைன் பதிவின் மூலம் விற்பனை செய்யலாம்.

விவசாயிகள் நெல்லை விற்பனை செய்வதற்கு அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கோ, இடைத்தரகர்களுக்கோ எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை. எனவே நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நெற்களை விற்பனை செய்து பயனடையலாம் என்றார்.

வேளாண் இணை இயக்குனர்(பொ) தனுஷ்கோடி, ஆர்.எஸ்.மங்கலம் உதவி இயக்குநர் ராஜலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us