/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கல்லுாரி தடகள வீரர்களுக்கு பாராட்டு
/
கல்லுாரி தடகள வீரர்களுக்கு பாராட்டு
ADDED : பிப் 18, 2026 08:07 AM
கீழக்கரை: கீழக்கரை முகமது சதக் பாலிடெக்னிக் கல்லுாரி மாணவர்கள் மதுரை மண்டல அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்றனர்.
சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக் கல்லுாரியில் சமீபத்தில் நடந்தது. முகமது ராசிக் குண்டு எறிதல் மற்றும் சங்கிலி கொண்டு எரிதலில் தங்கப்பதக்கம், முகமது சாகி ட்ரிபிள் ஜம்ப் போட்டியில் தங்கப்பதக்கம், முகமது வைஸ் 100 மீ., ஓட்டப்பந்தயத்தில் நான்காவது இடம், முகமது துபைல் வட்டு எறிதல் போட்டியில் நான்காவது இடமும் பெற்று மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர்.
பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குநர் மருதாச்சல மூர்த்தி, செந்தில் முருகன் ஆகியோரை கல்லுாரி முதல்வர் சேக் தாவூத், பேராசிரியர்கள், முகமது சதக் அறக்கட்டளையின் நிர்வாகிகள் பாராட்டினர்.

