sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மீனவரை மீட்ட மரைன் போலீசாருக்கு பாராட்டு

/

மீனவரை மீட்ட மரைன் போலீசாருக்கு பாராட்டு

மீனவரை மீட்ட மரைன் போலீசாருக்கு பாராட்டு

மீனவரை மீட்ட மரைன் போலீசாருக்கு பாராட்டு


ADDED : அக் 12, 2025 04:56 AM

Google News

ADDED : அக் 12, 2025 04:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டி : தொண்டி கடற்கரையில் பிரதமரின் தானிய வள வேளாண்மை திட்டம் நிகழ்ச்சி நடந்தது. தொண்டி மீன்வளத்துறை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு ராமநாதபுரம் மாவட்ட மீன்வளத்துறை துணை இயக்குநர் கோபிநாத் தலைமை வகித்தார். மீன்வளத்துறை ஆய்வாளர் அபுதாகிர் உட்பட பலர் கலந்து கொண்டனர். இத் திட்டம் குறித்து பிரதமர் மோடியின் பேச்சு நேரடியாக காட்சிப்படுத்தப்பட்டது.

இத் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு நிதி உதவிகள் வழங்கப்படும் என்று மீன்வளத்துறை அலுவலர்கள் பேசினர். அதனை தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு நம்புதாளை மீனவர் படகில் இருந்து தவறி விழுந்து 8 மணி நேரம் கடலில் தத்தளித்தார். அவரை மீனவர்கள் மீட்டு மரைன் போலீசாருக்கு தெரிவித்தனர்.

கியூ பிரிவு ஏட்டு இளையராஜா மற்றும் போலீசார் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் சிறப்பாக பணியாற்றிய இளையராஜாவிற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும் நம்புதாளை கூட்டுறவு சங்கத்தில் சிறப்பாக பணியாற்றிய முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் சத்தியேந்திரனுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us