ADDED : ஜன 13, 2026 05:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: பகுஜன் சமாஜ் கட்சி குறித்து அவதுாறாகப் பேசிய சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராமநாதபுரம் எஸ்.பி., அலுவலகத்தில் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் மனு அளித்தனர். மாவட்ட தலைவர் சிவானந்தன் கூறியதாவது:
சவுக்கு சங்கர் கருத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி பணம் சம்பாதிக்கிறார்.
அரசியல் விமர்சனம் என்ற பெயரில் பகுஜன் சமாஜ் கட்சியையும், அதன் மாநில தலைவர் ஆனந்தையும் விமர்சித்து தவறாக பேசியுள்ளார்.
அவர் மீதும், உதவியாளர் மாலதி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

