/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சூப்பர் ரிப்போர்ட்டோருக்கு வந்த புகார்கள் அதிகாரிகள் கவனத்திற்கு...
/
சூப்பர் ரிப்போர்ட்டோருக்கு வந்த புகார்கள் அதிகாரிகள் கவனத்திற்கு...
சூப்பர் ரிப்போர்ட்டோருக்கு வந்த புகார்கள் அதிகாரிகள் கவனத்திற்கு...
சூப்பர் ரிப்போர்ட்டோருக்கு வந்த புகார்கள் அதிகாரிகள் கவனத்திற்கு...
ADDED : ஜன 02, 2026 05:25 AM

பள்ளத்தால் ஆபத்து
ராமநாதபுரம் ரயில் நிலையத்தின் 1வது நடைமேடையில் குழாய் அமைப்பதற்காக பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. அதை முறையாக மூடாததால் ரயிலில் இருந்து இறங்கும் பயணிகள் தடுமாறி கீழே விழும் அபாயம் உள்ளது. ரயில் நிலைய நடை மேடையை முறையாக பராமரிக்க வேண்டும்.
-ராஜதுரை, ராமநாதபுரம்.
குண்டும் குழியுமான ராடு
ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை நுழைவு வாயில் பகுதி குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் மருத்துவமனை செல்வோர் தடுமாறி கீழே விழுகின்றனர். ஆம்புலன்ஸ் செல்லும் பாதையை சீரமைக்க வேண்டும்.
- கவிதா, ராமநாதபுரம்.
ஆபத்தான விளம்பர பலகை
முதுகுளத்துார் பாரத ஸ்டேட் வங்கி முன்பு மின்கம்பத்தில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு விளம்பர பலகை வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது துருப்பிடித்து ஆபத்தான நிலையில் உள்ளது. விபத்திற்கு முன் அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தி. அரிஹர பாண்டியன், கல்லுாரி மாணவர், முதுகுளத்துார்.
உடைந்து விழும் மின்கம்பம்
கிழக்கு கடற்கரை சாலையில் உப்பூர் -கடலுார் பஸ் ஸ்டாப் அருகில் உடைந்து விழும் நிலையில் மக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் மின்கம்பத்தை அகற்ற வேண்டும்.
-க.அமுதா, உப்பூர்.

