sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கச்சத்தீவை மீட்கக் கோரி ராமேஸ்வரத்தில் ஜூன் 27ல் மாநாடு

/

கச்சத்தீவை மீட்கக் கோரி ராமேஸ்வரத்தில் ஜூன் 27ல் மாநாடு

கச்சத்தீவை மீட்கக் கோரி ராமேஸ்வரத்தில் ஜூன் 27ல் மாநாடு

கச்சத்தீவை மீட்கக் கோரி ராமேஸ்வரத்தில் ஜூன் 27ல் மாநாடு


ADDED : ஜூன் 09, 2025 02:05 AM

Google News

ADDED : ஜூன் 09, 2025 02:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி ஜூன் 27 ல் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் விவசாயிகள், மீனவர்கள் ஒற்றுமை மாநாடு நடத்தப்படவுள்ளது.

ராமேஸ்வரத்தில் மீனவர்கள், விவசாயிகள் அமைப்பின் உயர்மட்டக்குழு கூட்டம் நேற்று நடந்தது. டில்லி போராட்ட தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் ரஜ்விந்தர்சிங்கோல்டன், விவசாயிகள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் அர்ச்சுணன், மாவட்ட செயலாளர் மலைச்சாமி, கோவை நிர்வாகி பாரூக்ஜூக்ராஜ் சிங், அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்கத் தலைவர் சேசுராஜா, பொருளாளர் சகாயம், துணைத்தலைவர் ஆல்வின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் 'கச்சத்தீவை மீட்போம்' என்ற முழக்கத்துடன் மீனவர்கள், விவசாயிகள் ஒற்றுமை மாநாடு ஜூன் 27 ல் நடத்த முடிவு செய்யப்பட்டது.

காவிரி, வைகை, கிருதுமால், குண்டாறு பாசன விவசாயிகள் சங்க அர்ச்சுணன் கூறியதாவது: 1960ல் உலக வங்கி மத்தியஸ்தத்தில் நடந்த சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்தது போல 1974ம் ஆண்டு இந்திய இலங்கை அரசுகள் செய்த கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்திட வேண்டும்.

மீனவர்களின் விலை மதிப்பில்லா உயிர்களை பாதுகாக்கவும், ரூ.பல கோடி மதிப்பிலான மீனவர்களின் படகுகள் மற்றும் உடமைகளை பாதுகாத்திடவும் வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் இந்த ஒற்றுமை மாநாடு நடத்தப்படவுள்ளது என்றார்.






      Dinamalar
      Follow us