/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பயணிகளின் வாகனங்களால் தனுஷ்கோடியில் நெரிசல்
/
பயணிகளின் வாகனங்களால் தனுஷ்கோடியில் நெரிசல்
ADDED : செப் 23, 2024 02:35 AM

ராமேஸ்வரம்,: -விடுமுறை தினத்தை முன்னிட்டு நேற்று தனுஷ்கோடி கடற்கரையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்ததால், தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நேற்றுவிடுமுறை தினத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் ராமேஸ்வரம் வந்தனர். கோயிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு சுற்றுலா பயணிகள் தனுஷ்கோடியில் குவிந்தனர்.
இங்கு 1964 புயலில் இடிந்த சர்ச், கோயில், ரயில்வே ஸ்டேஷன் கட்டடம் மற்றும் அரிச்சல்முனை கடற்கரை அழகை கண்டு ரசித்தனர்.
மேலும் இங்குள்ள கடலில் ஆபத்தை உணராமல் உற்சாகமாக குளித்தனர்.
அரிச்சல்முனையில் வாகனங்கள் நிறுத்த பார்க்கிங் வசதி இல்லாததால், தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலை இருபுறமும் ஏராளமான வாகனங்கள் நிறுத்தி இருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சுற்றுலா பயணிகள் உரிய நேரத்தில் திரும்பி செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.