sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ரெகுநாதபுரம் சந்தையில் நெரிசல் போலீஸ் நடவடிக்கை தேவை

/

ரெகுநாதபுரம் சந்தையில் நெரிசல் போலீஸ் நடவடிக்கை தேவை

ரெகுநாதபுரம் சந்தையில் நெரிசல் போலீஸ் நடவடிக்கை தேவை

ரெகுநாதபுரம் சந்தையில் நெரிசல் போலீஸ் நடவடிக்கை தேவை


ADDED : மார் 21, 2025 05:54 AM

Google News

ADDED : மார் 21, 2025 05:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரெகுநாதபுரம் : ரெகுநாதபுரம் ஊராட்சியில் ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடக்கும் நிலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் போலீசார் முறைப்படுத்த வேண்டும்.

கடந்த மூன்று மாதங்களாக ரெகுநாதபுரம் வாரச்சந்தை நடக்கும் திடலில் மழை நீர் தேங்கி பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் காய்கறி, மளிகை, பழ வியாபாரிகள் உள்ளிட்ட சந்தைக்கு வரக்கூடிய அனைத்து வியாபாரிகளும் பெரியபட்டினம் ரெகுநாதபுரம் பிரதான சாலையின் இரு புறங்களிலும் தற்காலிக கடைகளை விரிக்கின்றனர்.

தன்னார்வலர்கள் கூறியதாவது:

ரெகுநாதபுரம் வாரச்சந்தை சனிக்கிழமை தோறும் நடக்கிறது. சாலையின் இரு புறங்களிலும் சாலையோர சந்தை வியாபாரிகள் கடை வைக்கின்றனர். இதனால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் சாலையோரங்களில் டூவீலர்கள் நிறுத்துவதற்கு கூட வழி இல்லாத நிலை உள்ளது.

இப்பகுதியில் தொடர் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சந்தைக்கென திருப்புல்லாணி யூனியன் மற்றும் ரெகுநாதபுரம் ஊராட்சி நிர்வாகத்தால் குறிப்பிட்ட கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.

எனவே வசூலில் காட்டும் ஆர்வத்தை வார சந்தையை மேம்படுத்துவதற்கு செலவிட வேண்டும். அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டும். திருப்புல்லாணி போலீசார் கூடுதல் எண்ணிக்கையில் அங்கு வந்து போக்குவரத்தை சரி செய்வதற்கான முயற்சியை எடுக்க வேண்டும் என்றனர்.






      Dinamalar
      Follow us