ADDED : மார் 08, 2024 12:34 PM

ராமநாதபுரம்: தேர்தல் பத்திரத்தில் பா.ஜ., வுக்கு நன்கொடை வழங்கியவர்கள் விபரங்களை வெளியிடாத பாரத ஸ்டேட் வங்கியை கண்டித்து ராமநாதபுரத்தில் காங்., கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தேர்தல் பத்திரத்தில் பா.ஜ., கட்சிக்கு நன்கொடை வழங்கியவர்கள் விபரங்களை வெளியிடாத பாரத ஸ்டேட் வங்கியை கண்டித்து அந்த வங்கியின்முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ராஜாராம் பாண்டியன் தலைமை வகித்தார்.
முன்னாள் மாவட்டத்தலைவர் செல்லத்துரை அப்துல்லா, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் வேல்சாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் ேஷாபா, ஆனந்தக்குமார், ஜோதிபாலன், முன்னாள் எம்.எல்.ஏ., பாண்டியன், தெய்வேந்திரன், கோட்டைமுத்து, ஆர்ட் கணேசன், பூவலிங்கம், மகிளா காங்.,மாவட்டத்தலைவி ராமலட்சுமி உட்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பாரத ஸ்டேட் வங்கியை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

