UPDATED : மே 08, 2026 06:46 PM
ADDED : மே 08, 2026 06:43 PM

அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: த.வெ.க.,வை ஆட்சியமைக்க கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர் அழைப்பு விடுக்காததை கண்டித்து காங்., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ராமநாதபுரம், அரண்மனை பகுதியில் நடந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜாராம் பாண்டியன் தலைமை வகித்தார். அவர் பேசியதாவது: தமிழக சட்டசபை தேர்தலில் தனிப்பெரும் கட்சியான த.வெ.க.,வுக்கு காங்., ஆதரவு தெரிவித்த பின்பும் ஆட்சி அமைக்க அழைக்கவில்லை. பா.ஜ.,வுக்கு ஆதரவாக செயல்படும் தமிழக பொறுப்பு கவர்னரின் செயல் கண்டிக்கதக்கது என்றார். நிகழ்வில் மாவட்ட, வட்டார நிர்வாகிகள் பங்கேற்றனர்.
