ADDED : பிப் 24, 2024 06:04 AM
அ நிறம் | அளவு
ஆர்.எஸ்.மங்கலம், : ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஆவரேந்தல் கிராமத்தில் கன்னி கருமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக விநாயகர், விக்னேஸ்வரர் பூஜைகள் நடந்தன. முதல், இரண்டாம் கால யாகசாலை பூஜை, கோ பூஜை செய்யப்பட்டு யாகசாலையில் பூஜை செய்யப்பட்ட புனித நீர் கோயில் கோபுரத்தில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
விநாயகர், நாகம்மாள், சாந்தி அம்மன், பத்திரகாளியம்மன், சோனை கருப்பண்ண சுவாமி, நவக்கிரகம் ஆகியவற்றிற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அன்னதானம் வழங்கப்பட்டது.
