ADDED : பிப் 11, 2025 04:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே குதக்கோட்டை ஊராட்சியில் உள்ள அக்னி வீரபத்திரர் கோயிலில் கும்பாபிஷேக விழா நடந்தது.
கடந்த பிப்.,8 முதல் கால யாகசாலை பூஜை துவங்கியது. நேற்று காலை 10:00 மணிக்கு யாகசாலையில் இருந்து கடம் புறப்பட்டு அக்னி வீரபத்திரர் கோயில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை குதக்கோட்டை மற்றும் சாயல்குடி யாதவர் மகாசபை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

