sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

குடிநீர் குழாய்களில் தொடர் உடைப்பு

/

குடிநீர் குழாய்களில் தொடர் உடைப்பு

குடிநீர் குழாய்களில் தொடர் உடைப்பு

குடிநீர் குழாய்களில் தொடர் உடைப்பு


ADDED : ஜன 20, 2025 07:29 AM

Google News

ADDED : ஜன 20, 2025 07:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி: பரமக்குடி அருகே ராமநாதபுரம் ரோட்டோரம் குடிநீர் குழாய்களில் தொடர்ந்து உடைப்பு ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்கின்றனர்.

பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்ய ரோட்டோரங்களில் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. காவிரி கூட்டு குடிநீர் குழாய்கள் உட்பட ஒன்றிய பகுதிகளுக்கான குழாய்களும் பதிக்கப்படுகிறது.

இந்நிலையில் பரமக்குடி வைகை ஆறு சர்வீஸ் ரோடு பகுதியில் இருந்து வலது பிரதான கால்வாய் செல்லும் ராமநாதபுரம் ரோட்டோரம் இரு புறங்களிலும் தொடர்ந்து உடைப்பு ஏற்படுகிறது. இப்பகுதியில் நகராட்சி காவிரி குடிநீர் மற்றும் கிராமப்புறங்களுக்கான குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஒவ்வொரு முறையும் இந்த குழாய்களில் உடைப்பு ஏற்படும் போது எந்த திட்டக் குழாய்கள் என கண்டறிவதில் சிக்கல் ஏற்படுகிறது. இச்சூழலில் குறிப்பிட்ட பகுதிகளுக்கு சில நாட்கள் தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது.

மேலும் மதுரை, ராமேஸ்வரம் பகுதிகளுக்கு அதிகமான வாகன போக்குவரத்து உள்ள நிலையில் ரோட்டோரம் செல்லும் வாகனங்கள் விபத்திற்குள்ளாகும் அபாயம் உள்ளது. ஆகவே பழைய குடிநீர் குழாய்களை அப்புறப்படுத்தி புதிதாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us