sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

திருவாடானை கல்லுாரியில் நாளை முதல் கலந்தாய்வு

/

திருவாடானை கல்லுாரியில் நாளை முதல் கலந்தாய்வு

திருவாடானை கல்லுாரியில் நாளை முதல் கலந்தாய்வு

திருவாடானை கல்லுாரியில் நாளை முதல் கலந்தாய்வு


ADDED : மே 31, 2025 11:19 PM

Google News

ADDED : மே 31, 2025 11:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: திருவாடானை அரசு கலைக்கல்லுாரியில் கலந்தாய்வு நாளை (ஜூன் 2) முதல் துவங்குகிறது.

திருவாடானை அரசு கலைக்கல்லுாரியில் பி.ஏ., தமிழ், பி.ஏ., ஆங்கிலம், பி.எஸ்சி., கணிதம், கணினி அறிவியல், காட்சி தொடர்பியல், பி.காம் தமிழ்வழி, பி.காம் ஆங்கில வழி பட்டப்படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்காக ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

இதையடுத்து கலந்தாய்வு நாளை (ஜூன் 2) நடக்கிறது. கல்லுாரி முதல்வர் பழனியப்பன் கூறியதாவது:

திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் வாயிலாக மே 27 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

அந்த விண்ணப்பங்கள் அடிப்படையில் தரவரிசைப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கலந்தாய்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர் குழந்தைகள், விளையாட்டு வீரர்கள், என்.சி.சி., பிரிவுகளுக்கு நாளை கலந்தாய்வு நடக்கிறது.

ஜூன் 4 ல் பி.ஏ. ஆங்கிலம், பி.எஸ்.சி. கணிதம், பி.எஸ்.சி. கணினி அறிவியல், பி.ஏ. தமிழ், பாடப்பிரிவுகளுக்கும், மறுநாள் பி.காம். ஆங்கில வழிகல்வி, பி.காம் தமிழ் வழி, பி.எஸ்.சி. காட்சி தொடர்பியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் நடைபெறும் என்றார்.






      Dinamalar
      Follow us