sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

நாட்டுப்படகு மீனவர் வலைகள் அறுப்பு

/

நாட்டுப்படகு மீனவர் வலைகள் அறுப்பு

நாட்டுப்படகு மீனவர் வலைகள் அறுப்பு

நாட்டுப்படகு மீனவர் வலைகள் அறுப்பு


ADDED : ஜன 15, 2024 04:43 AM

Google News

ADDED : ஜன 15, 2024 04:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டி, : காரைக்கால் மீனவர்கள் வரையறை மீறி மீன் பிடிப்பது, மீன்பிடி வலைகளை அறுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக நாட்டுப்படகு மீனவர்கள் கூறினர்

தொண்டி அருகே நம்புதாளை கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் தினகரன், கருப்புசாமி. இருவரும் நேற்று முன்தினம் நாட்டுப் படகில் 10 கடல் மைல் தொலைவில் சென்று வலையை விரித்து மீன் பிடித்தனர்.

அப்போது புதுவை காரைக்காலை சேர்ந்த மீனவர்கள் சென்று வலையை அறுத்து விட்டுச் சென்றனர்.

இச்சம்பவம் அடிக்கடி நடப்பதால் காரைக்கால் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் வலியுறுத்தினர். நம்புதாளை மீனவர்கள் கூறியதாவது:

ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் பல ஆயிரம் நாட்டுப்படகு மீனவர்கள் உள்ளனர்.

வாரத்திற்கு மூன்று நாட்கள் மட்டும் டோக்கன் வழங்குவதால் கடலுக்குள் சென்று மீன் பிடிக்கிறோம். ஆனால் காரைக்கால் மீனவர்களுக்கு டோக்கன் முறை இல்லாததால் 24 மணி நேரமும் மீன் பிடிக்கின்றனர்.

எல்லை தாண்டி வந்து நாங்கள் விரித்துள்ள வலைகளை சேதபடுத்துகின்றனர். காரைக்கால் மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமநாதபுரம் கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம் என்றனர்.






      Dinamalar
      Follow us