sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

காசோலை  மோசடி வழக்கில்  சகோதரர்களுக்கு தண்டனையை உறுதி செய்து நீதிமன்றம் தீர்ப்பு

/

காசோலை  மோசடி வழக்கில்  சகோதரர்களுக்கு தண்டனையை உறுதி செய்து நீதிமன்றம் தீர்ப்பு

காசோலை  மோசடி வழக்கில்  சகோதரர்களுக்கு தண்டனையை உறுதி செய்து நீதிமன்றம் தீர்ப்பு

காசோலை  மோசடி வழக்கில்  சகோதரர்களுக்கு தண்டனையை உறுதி செய்து நீதிமன்றம் தீர்ப்பு


ADDED : ஆக 14, 2025 11:33 PM

Google News

ADDED : ஆக 14, 2025 11:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே நம்பியான்வலசையைச் சேர்ந்த சேது மகன் முனியசாமி 40. இவர் போக்குவரத்து நகர் ரயில்வே பீடர் தெருவைச் சேர்ந்த செல்வம் மகன்கள் ராஜகுமாரன் 38, சுரேஷ்கண்ணன் 36, ஆகியோரது சொத்தை அடமானமாக பெற்றுக் கொண்டு ரூ.20 லட்சம் கடன் கொடுத்தார்.

கடனை இருவரும் திருப்பி செலுத்துவதற்காக தனித்தனியாக வங்கி காசோலைகளை வழங்கினர். அவற்றை முனியசாமி ராமநாதபுரம் வங்கியில் செலுத்திய போது போதிய பணம் இல்லை என திருப்பி அனுப்பப்பட்டது. இதுகுறித்து முனியசாமி ராமநாதபுரம் வழக்கறிஞர் சண்முகநாதன் மூலம் ராமநாதபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 2 ல் வழக்கு தொடர்ந்தார்.

இதில் கடந்த 2024 டிச.,27ல் ராஜகுமாரன், சுரேஷ்கண்ணனுக்கு தலா ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.7 லட்சத்து 44 ஆயிரம் இழப்பீடாக 2 மாதத்திற்குள் முனியசாமிக்கு வழங்கவும், தவறினால் மேலும் 2 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்கவும் மாஜிஸ்திரேட் பிரபாகரன் தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பிற்கு எதிராக ராமநாதபுரம் கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் ராஜகுமாரன், சுரேஷ்கண்ணன் தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர். முனுசாமி தரப்பில் வழக்கறிஞர் சண்முகநாதன் வாதிட்டார். ராமநாதபுரம் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் நீதிபதி மோகன்ராம் ராமநாதபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 2 ல் வழங்கிய தீர்ப்பை உறுதிசெய்து தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us