/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சைக்கிளில் வந்தனர் சி.எஸ்.ஐ.எப்., வீரர்கள்
/
சைக்கிளில் வந்தனர் சி.எஸ்.ஐ.எப்., வீரர்கள்
ADDED : மார் 30, 2025 04:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொண்டி : கடலோர பாதுகாப்பை வலியுறுத்தியும், மத்திய தொழிலக பாதுகாப்பு படையின் 56 வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் பாதுகாப்பு வீரர்கள் சைக்கிள் ஊர்வலம் துவக்கியுள்ளனர்.
மத்திய தொழிலக பாதுகாப்பு படை வீரர்கள் 100க்கும் மேற்பட்டோர் சைக்கிளில் வந்தனர். நேற்று தொண்டிக்கு வந்த அவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. திருவாடானை தாசில்தார் ஆண்டி, தொண்டி வருவாய் ஆய்வாளர் மேகமலை, வி.ஏ.ஓ. நம்புராஜேஸ் மற்றும் பொதுமக்கள் வரவேற்றனர்.