/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் மீனவர்களுக்கு நவ.20 வரை காவல் நீட்டிப்பு
/
ராமேஸ்வரம் மீனவர்களுக்கு நவ.20 வரை காவல் நீட்டிப்பு
ராமேஸ்வரம் மீனவர்களுக்கு நவ.20 வரை காவல் நீட்டிப்பு
ராமேஸ்வரம் மீனவர்களுக்கு நவ.20 வரை காவல் நீட்டிப்பு
ADDED : நவ 07, 2024 02:18 AM
ராமேஸ்வரம்:இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 16 பேருக்கு நவ.20 வரை சிறைக்காவலை நீட்டித்து ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது.
அக்.23ல் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் இரு படகில் இருந்த 16 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.
இவர்களை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் பல கட்ட போராட்டம் நடத்தினர்.
வாய்தா நாளான நேற்று 16 பேரையும் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.
அவர்களை நவ.20 வரை சிறையில் அடைக்க ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது. மீனவர்கள் விடுவிக்கப்படலாம் என ஆவலுடன் எதிர்பார்த்த அவர்களின் குடும்பத்தினர் சிறைக் காவல் நீட்டிப்பு தகவலால் அதிர்ச்சி அடைந்தனர்.