sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மண்டபத்தில் பயன்பாடின்றி முடங்கிய சுங்கத்துறை படகு

/

மண்டபத்தில் பயன்பாடின்றி முடங்கிய சுங்கத்துறை படகு

மண்டபத்தில் பயன்பாடின்றி முடங்கிய சுங்கத்துறை படகு

மண்டபத்தில் பயன்பாடின்றி முடங்கிய சுங்கத்துறை படகு


ADDED : செப் 07, 2025 03:02 AM

Google News

ADDED : செப் 07, 2025 03:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமேஸ்வரம்: -ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் சுங்கத்துறை ரோந்து படகு பயன்பாடின்றி முடங்கியதால், மத்திய அரசுக்கு ரூ. 20 லட்சம் வீணாகி போனது.

ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதியில் இருந்து இலங்கைக்கு கஞ்சா, போதை மாத்திரைகள் கடத்திச் செல்வதும், இலங்கையில் இருந்து தங்கக் கட்டிகள் கடத்தி வருவது தடை இருந்தும் நடக்கிறது. இதனை தடுக்க 6 ஆண்டுக்கு முன் மண்டபம் சுங்கத்துறைக்கு ரூ. 20 லட்சம் மதிப்பில் அதிவேக ரோந்து படகு வழங்கப்பட்டது.

இந்த படகில் இரு அதிவேக இன்ஜின் மூலம் ஒரு மணிக்கு 60 முதல் 80 கி.மீ., வேகத்தில் கடத்தல்காரர்களை பிடிக்கவும், 6 சுங்கத்துறை சிப்பாய்கள் அமரும் இருக்கை வசதியும் உள்ளது.

ஆனால் இந்த படகில் 5 சதவீதம் கூட சுங்கத்துறையினர் ரோந்தில் ஈடுபடவில்லை. இப்படகை சுங்கத்துறை அலுவலகம் பின்புறம் நிறுத்தியே வைத்து பராமரிக்காததால் வெயில், மழையினால் இன்ஜின் பழுதாகி, படகு பலவீனமாகி சேதமடைந்து முடங்கியது. இதனையடுத்து ரோந்து படகை சுங்கத்துறையினர் அலுவலக வளாகத்திற்குள் நிறுத்தி உள்ளனர். இதனால் மத்திய அரசின் நிதி ரூ. 20 லட்சம் வீணாகியுள்ளது.






      Dinamalar
      Follow us