/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சூறாவளி: ராமேஸ்வரம் மீனவர்களுக்கு தடை
/
சூறாவளி: ராமேஸ்வரம் மீனவர்களுக்கு தடை
ADDED : ஜன 06, 2024 05:33 AM
ராமேஸ்வரம்: வங்க கடலில் சூறாவளி எச்சரிக்கையால் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன்துறையினர் தடை விதித்தனர்.
வடகிழக்கு பருவக்காற்று தீவிரமடைந்து வங்கக்கடலில் சூறாவளிக் காற்று வீசக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனால் இன்று (ஜன.6) ராமேஸ்வரம், மண்டபத்தில் இருந்து மீன்பிடிக்க செல்ல வேண்டிய விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்களுக்கு மீன்துறையினர் தடை விதித்துள்ளனர். இன்று மீன்பிடிக்க செல்ல அனுமதி டோக்கன் வழங்குவதை நிறுத்தினர்.
மேலும் நாட்டுப்படகு மீனவர்கள் உள்ளிட்ட அனைத்து மீனவர்களும் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க செல்லக்கூடாது என மீன்துறையினர் தெரிவித்தனர். இதனால் ராமேஸ்வரம், மண்டபம் பகுதியில் 2000 விசைப்படகுகள், நாட்டுப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் கரையில் நிறுத்தினர்.