ADDED : டிச 18, 2024 02:35 AM

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் கடலில் சூறாவளி வீசுவதால் 2ம் நாளாக மீன்பிடிக்க தடை விதித்ததால் மீனவர்கள் வீடுகளில் முடங்கினர்.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் ராமேஸ்வரம், பாம்பன் பகுதியில் சூறாவளிக் காற்று வீசியதால் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுந்தது.
இதனால் டிச.14ல் ராமேஸ்வரம் மண்டபம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்துறையினர் தடை விதித்தனர்.
இதனால் 1500 விசைப்படகுகள், நாட்டுப் படகுகள் கரையில் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில் 2ம் நாளான நேற்றும் ராமேஸ்வரம் பகுதியில் மேக மூட்டத்துடன் சூறாவளி வீசியதால் கடலில் அதிக நீரோட்டம் காணப்பட்டது.
இதனால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல தடை நீட்டிக்கப்படுவதாக நேற்று மாலை 5:00 மணிக்கு மீன்துறையினர் அறிவித்தனர்.
இதனால் வேலையின்றி அன்றாட குடும்பச் செலவுக்கு வருமானமும் இன்றி மீனவர்கள் வீடுகளில் முடங்கினர்.