sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மன்னார் வளைகுடா கடலில் சூறாவளி 5 படகுகள் மூழ்கின; 4 படகுகள் சேதம்

/

மன்னார் வளைகுடா கடலில் சூறாவளி 5 படகுகள் மூழ்கின; 4 படகுகள் சேதம்

மன்னார் வளைகுடா கடலில் சூறாவளி 5 படகுகள் மூழ்கின; 4 படகுகள் சேதம்

மன்னார் வளைகுடா கடலில் சூறாவளி 5 படகுகள் மூழ்கின; 4 படகுகள் சேதம்


ADDED : டிச 14, 2024 02:16 AM

Google News

ADDED : டிச 14, 2024 02:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாயல்குடி:மன்னார் வளைகுடா கடலில் நேற்று முன்தினம் இரவு 11:00 முதல் அதிகாலை 3:00 மணி வரை வீசிய சூறாவளியால் எழுந்த பேரலைகளின் தாக்கத்தால் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே கீழமுந்தல், ரோஜ்மாநகர் மன்னார் வளைகுடா கடலில் நிறுத்தப்பட்டிருந்த 5 நாட்டுப்படகுகள் நீரில் மூழ்கின. இதில் 4 படகுகள் மீட்கப்பட்டன.

கீழமுந்தல் மன்னார் வளைகுடா கடலில் 20க்கும் அதிகமான நாட்டுப் படகுகள் கடலில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தன. நேற்று முன்தினம் இரவு மற்றும் அதிகாலை பெய்த மழை மற்றும் சூறாவளியால் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டது.

இதில் கடலில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த மீனவர்கள் காட்டு ராஜா, கணேசன் ஆகியோரது இரண்டு நாட்டுப்படகுகள் கயிறு அறுபட்ட நிலையில் 200 மீ.,க்கு அடித்துச் செல்லப்பட்டு கடலில் வலைகள் மற்றும் தளவாட பொருட்களுடன் மூழ்கியது.

இதையறிந்த மீனவர்கள் நேற்று காலை 6:00 மணிக்கு மற்றொரு நாட்டுப் படகின் உதவியுடன் மூழ்கிய இரு படகுகளில் ஒன்றை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். மற்றொரு படகை தேடுகின்றனர்.

கன்னிராஜபுரம் ஊராட்சி ரோஜ்மாநகர் மன்னார் வளைகுடா கடலில் நிறுத்தப்பட்ட 3 நாட்டுப்படகுகள் பேரலைகள் தாக்கத்தால் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டு மூழ்கின. படகு உரிமையாளர்களான ராயப்பன், ரிச்சர்ட், சூசை ஆகியோருக்கு சொந்தமான ரூ.15 லட்சம் மதிப்பிலான படகுகள் மூழ்கியதால் படகின் இன்ஜின், வலைகள் உள்ளிட்டவைகள் சேதமடைந்தன. நேற்று உள்ளூர் மீனவர்களின் உதவியுடன் கடலில் மூழ்கிய மூன்று நாட்டுப்படகுகளையும் மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.






      Dinamalar
      Follow us