/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வங்கக்கடலில் சூறாவளி: மீனவர்களுக்கு தடை
/
வங்கக்கடலில் சூறாவளி: மீனவர்களுக்கு தடை
ADDED : ஜன 16, 2025 11:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்:இரு நாட்களாக ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதியில் சூறாவளி வீசி கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுந்தது. மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றால் சிரமம் ஏற்படும் என்பதால் பாம்பன், மண்டபம் பகுதி விசைப்படகு, நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல மீன்வளத்துறையினர் தடை விதித்தனர்.
இன்று மன்னார் வளைகுடா கடலில் மீன்பிடிக்கச் செல்ல தயாராக இருந்த பாம்பன், மண்டபம் பகுதி மீனவர்கள் வீடுகளில் முடங்கினர்.