/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சூறாவளி; ராமேஸ்வரம் மீனவர்களுக்கு தடை
/
சூறாவளி; ராமேஸ்வரம் மீனவர்களுக்கு தடை
ADDED : டிச 11, 2024 07:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்,: வங்கக்கடலில் சூறாவளி வீசக்கூடும் என்பதால் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் இன்று மீன்பிடிக்கச் செல்ல மீன்துறையினர் தடை விதித்தனர்.
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவானதால் தமிழக கடலோரப் பகுதியில் மணிக்கு 40 முதல் 45 கி.மீ., வேகத்தில் சூறாவளி வீசி கடலில் கொந்தளிப்பு ஏற்படும் என வானிலை மையம் தெரிவித்தது.
இச்சூழலில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றால் சிரமம் ஏற்படும் என்பதால் ராமேஸ்வரம், மண்டபம் பகுதி மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல மீன்துறையினர் தடை விதித்தனர். இதனால் 1500 விசைப்படகுகள், நாட்டுப்படகுகள் கரையில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டு மீனவர்கள் வீடுகளில் முடங்கினர்.