/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உழவர் சந்தை ரோடு சேதம் வாகன ஓட்டிகள் அவதி
/
உழவர் சந்தை ரோடு சேதம் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஜன 04, 2024 02:02 AM

பரமக்குடி: பரமக்குடி உழவர் சந்தை ரோடு சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அவ்வழியாக செல்வதற்கு சிரமப்படுகின்றனர். இரவு நேரத்தில் விபத்து அபாயம் உள்ளது.
பரமக்குடி ஐந்து முனை ரோட்டில் இருந்து நகர் பகுதிக்கு செல்ல பிரதான ரோடாக உழவர் சந்தை பகுதி உள்ளது. இங்கு உழவர் சந்தை நுழையும் இடம், மதுரை- மண்டபம் நெடுஞ்சாலை இணையும் மருத்துவமனை ரோடு மற்றும் மேல பள்ளிவாசல் ரோடு என இணைகிறது.
இப்பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேவர் கல் தளம் புதுப்பித்து அமைக்கப்பட்டது. தற்போது கற்கள் குறிப்பிட்ட இடத்தில் பெயர்ந்துள்ளது.
இதன் வழியாக செல்லும் பள்ளி மாணவர்கள், பெண்கள், வழிபாட்டு தலங்களுக்கு செல்வோர் என தடுமாறுகின்றனர். மேலும் டூவீலர், சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் செல்வோர் விபத்துக்குள்ளாகின்றனர்.
எனவே ரோட்டை சீரமைக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.