/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பழைய பஸ் ஸ்டாண்டில் தரைத்தளம் சேதம் பயணிகள் பரிதவிப்பு; தடையை மீறி உள்ளே டூவிலர்கள் ஆக்கிரமிப்பு
/
பழைய பஸ் ஸ்டாண்டில் தரைத்தளம் சேதம் பயணிகள் பரிதவிப்பு; தடையை மீறி உள்ளே டூவிலர்கள் ஆக்கிரமிப்பு
பழைய பஸ் ஸ்டாண்டில் தரைத்தளம் சேதம் பயணிகள் பரிதவிப்பு; தடையை மீறி உள்ளே டூவிலர்கள் ஆக்கிரமிப்பு
பழைய பஸ் ஸ்டாண்டில் தரைத்தளம் சேதம் பயணிகள் பரிதவிப்பு; தடையை மீறி உள்ளே டூவிலர்கள் ஆக்கிரமிப்பு
ADDED : மார் 10, 2024 03:57 AM

ராமநாதபுரம் : புதிய பஸ்ஸ்டாண்ட் கட்டுமானப்பணி நடப்பதால் ராமநாதபுரம் குறுகிய இடவசதியுள்ள பழைய பஸ்ஸ்டாண்டில் இருந்து 300க்கு மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகிறது. இங்கு தரைத்தளம் சேதமடைந்துள்ளதோடு கண்டபடி டூவீலர்களை நிறுத்துவதால் பஸ்கள் வந்து செல்வதற்கும், பயணிகள் நடந்து செல்வதற்கும் இடையூறு ஏற்படுகிறது.
ராமநாதபுரம் நகராட்சி புதிய பஸ்ஸ்டாண்ட் 2023 ஆக.3 ல் ரூ.20 கோடியில் 6909 சதுர அடியில் கட்டுமானப் பணிகள் துவங்கியது. அப்போது பழைய பஸ் ஸ்டாண்ட், மூலக்கொத்தளம் வீட்டுவசதி வாரியம் இடத்தில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிர்வாகத்தினர் கூறினர்.
தற்போது வரை அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் பழைய பஸ்ஸ்டாண்டில் இருந்து 300க்கு மேற்பட்ட பஸ்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இட நெருக்கடியால் பஸ்களை நகர்த்துவதில் சிக்கல் ஏற்படுகிறது.
பஸ்களை நிறுத்த போதிய இடவசதி இல்லாததால் அலுவலக வேலை நேரங்களான காலை, மாலை நேரங்களில் பஸ்ஸ்டாண்டிற்குள் பஸ்களை நிறுத்தவும், இயக்கவும் முடியாமல் டிரைவர்கள் திணறுகின்றனர். கடைகளும் பெயரளவில் மட்டுமே உள்ளன.
குடிநீர், கழிப்பறை வசதிகள் போதுமான அளவில் இல்லை. பஸ்கள் உள்ளே செல்லும் போதும், வெளிய வரும் போதும் ரயில்வே பீடர் ரோட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பஸ்ஸ்டாண்டில் சில மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட தரைத்தளம் சேதமமைடந்துள்ளதால் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர்.
மேலும் பஸ்நிறுத்தும் இடங்களில் டூவீலர்கள் ஆக்கிரமிப்பால் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பழைய பஸ் ஸ்டாண்டில் தரைத்தளத்தை சீரமைக்கவும், ஆக்கிரமிப்பு வாகனங்களை அகற்றவும், போலீசார், நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-----

