/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நடுக்கடலில் பழுதான படகு இலங்கை கடற்படை உதவி
/
நடுக்கடலில் பழுதான படகு இலங்கை கடற்படை உதவி
ADDED : செப் 23, 2024 02:26 AM
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் இருந்து, 400 விசைப்படகில் நேற்று முன்தினம் சென்ற மீனவர்கள் வழக்கம் போல் இந்திய - இலங்கை எல்லையில் மீன்பிடித்தனர். அங்கு, மூன்று கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள், துப்பாக்கியை காட்டி எச்சரித்து தங்கள் பகுதி எனக்கூறி மீனவர்களை விரட்டினர்.
பீதியடைந்த மீனவர்கள் படகுடன் நாலாபுறமும் சிதறி ஓடினர். இதில், மூன்று படகின் மீனவர்கள் கடலில் வீசிய வலையை வெட்டி மூழ்கடித்துவிட்டு வெறும் படகுடன் ராமேஸ்வரம் கரை திரும்பினர்.
ஜஸ்டின் என்பவரது படகில் இன்ஜின் பழுதாகி அன்று மதியம் 2:00 மணிக்கு நடுக்கடலில் நின்றது. படகை பிடித்த இலங்கை வீரர்கள், பழுது நீக்க மீனவர்களுக்கு மனிதநேயத்துடன் உதவினர். இன்ஜினில் பழுது நீங்கியதும், 8 மணி நேரத்திற்கு பின் இரவு 10:00 மணிக்கு விடுவிக்கப்பட்டு, ஆறு மீனவர்கள் ராமேஸ்வரம் திரும்பினர்.