sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

அரசுப்பள்ளியில் சேதமடைந்த சுற்றுச்சுவர் பராமரிப்பு பணி செய்யப்படாத அவலம்

/

அரசுப்பள்ளியில் சேதமடைந்த சுற்றுச்சுவர் பராமரிப்பு பணி செய்யப்படாத அவலம்

அரசுப்பள்ளியில் சேதமடைந்த சுற்றுச்சுவர் பராமரிப்பு பணி செய்யப்படாத அவலம்

அரசுப்பள்ளியில் சேதமடைந்த சுற்றுச்சுவர் பராமரிப்பு பணி செய்யப்படாத அவலம்


ADDED : பிப் 18, 2025 04:59 AM

Google News

ADDED : பிப் 18, 2025 04:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே கீழத்துாவல் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சேதமடைந்துள்ள சுற்றுச்சுவரை தற்போது வரை பராமரிக்காமல் உள்ளனர்.

முதுகுளத்துார் அருகே கீழத்துாவல் அரசு மேல்நிலைப்பள்ளியில் மகிண்டி, மைக்கேல்பட்டணம், கீழத்துாவல், மேலத்துாவல் கிருஷ்ணாபுரம், விளங்குளத்துார் சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 400க்கும் அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர்.

இங்கு பள்ளியை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டிருந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சேதமடைந்து இடிந்து விழுந்தது. தற்போது பள்ளியை சுற்றிலும் அறையும் குறையுமாக சுற்றுச்சுவர் உள்ளது. இதனால் பள்ளி நேரத்தில் கால்நடைகள் உலா வருவதால் மாணவர்கள் அச்சப்படுகின்றனர். பள்ளி அருகே மாணவியர் விடுதி செயல்பட்டு வருகிறது.

தற்போது ஒருசில பகுதிகளை மட்டும் சுற்றுச்சுவர் மராமத்து பணி செய்து வர்ணம் பூசப்பட்டுள்ளது. இடிந்து விழுந்த பகுதி எந்தவித பணியும் செய்யாமல் திறந்த வெளியிலே உள்ளது. எனவே பள்ளி முழுவதும் சுற்றுச்சுவர் பராமரிப்பு பணி செய்ய வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.






      Dinamalar
      Follow us